எனது ஆருயிர் நண்பர் திரு சுரேஷ்
சந்திரகுமார் அவர்கள்தனது முக நூல் பக்கத்தில் write down your own
autobiography during his lock down – என்று பதிவிட்டிருந்தார். திரு
சுரேஷ் எனது ஆருயிர் நண்பராக இருந்தாலும் நாங்கள்
இருவரும் நேரெதிரான சித்தாந்தங்களில் பயணிப்பவர்கள் ஆனால் நாங்கள்
எப்போதும் ஒருவர்மீது சேற்றை வாரி இறைத்து கொணடதில்லை சில சமயங்கள் பரஸ்பரம் சந்தானம் பூசி கொண்டதுண்டு. அவர் சொன்னபடி
இந்த இறுக்கமான நேரத்தில் என் எண்ணங்களை எழுதுகிறேன். உடன்பாடு இருந்தால் லைக் பண்ணுகள் எதிர்மறையாய் இருந்தால் விமரிசியுங்கள் ஆனால்
தயவு செய்து என்னை அடையாளப்படுத்தி விடாதீர்கள்,
உங்களில் ஒருவன் நான் எனக்கு எந்த அடையாளமும் இல்லை கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது
போல் கேள்விகளால் வேள்வி செய்வேன் – எனவே நீங்களும் வாருங்கள் வேள்விகளால்
ஞானம் பெறுவோம்
நமது சமூகத்தில் எதிர்பாராமல் ஏற்படும் சில நிகழ்வுகள் நமது
பொருளாதாரம்,வாழ்வியல் தனிமனித உறவுகள்,மற்றும் கலாச்சாரத்தில்,மிகப்பெரிய மாற்றங்களை
ஏற்படுத்துகின்றன. சில நிகழ்வுகள் நமக்கு சில சேதிகளை சொல்கின்றன அல்லது நமது சில
நீண்ட நெடுங்கால நம்பிக்கையை தகர்த்து விடுகின்றன. உதாரணமாக காயாஸ் தியரியின் படி
இந்த பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகளும் ஒன்றோடு சம்பந்த பட்டவை, சில
செயல்கள் உடனடியாக விளைவுகளை ஏற்படுத்தும்
சில செயல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு
பிறகு விளைவுகளை ஏற்படுத்தும் ஆனாலும் ஒரு
தொடர்பு (கலமஹாசன் தசாவதாரத்தில் சொல்லும்
பட்டாம்பூச்சி உதாரணம் ) இணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்
நமது நாட்டை மட்டும்
அல்லாமல் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே
உலுக்கிக்கிகொண்டிருக்கும் ஒற்றை சொல் Govid 19 என்று சொல்லப்படும் கொரானா.
இன்று உலகமெங்கும் உச்சரிக்கப்டும் இந்த
ஒற்றை சொல் நமது சமூக, பொருளாதாரம், அன்றாட வாழ்வியல் முதலிய எல்லாவற்றிலும்
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இந்த ஒட்டு மொத்த உலகத்தையே வீட்டுக்குள் முடக்கி
போட்டு விட்டது. ஆனாலும் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த குழப்பமான, பின்னிணைந்த தன்மையை உணர்ந்துகொள்வது நமக்கு புதிய நுண்ணறிவு, சக்தி மற்றும் ஞானத்தை அளிக்கும்.. எடுத்துக்காட்டாக, வளிமண்டலத்தின் சிக்கலான, குழப்பமான இயக்கவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், ஒரு பைலட் தந்து விமானத்தை விரும்பிய இடத்திற்கு
“வழிநடத்த” முடியும். எனவே இந்த தோடர்வினையை சரியாக புரிந்துகொள்வதன் மூலம், நமது நீண்டகால நல்வாழ்வுக்கு
தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்கலாம் அல்லது நன்மை விளைவிக்கும் செயல்களை பின்பற்றலாம். எல்லா
நன்மைகளிலும் ஒரு தீமை உண்டு எல்லா தீமைகளிலும் ஒரு நன்மை உண்டு இது பொது நியதி. கொரான என்ற இந்த தீமை ஏற்படுத்திய நன்மைகள்
அல்லது படிப்பினைகளை ஒவ்வொரு துறையாக
பார்ப்போம்
திருமணம் மற்றும் விழாக்கள்:
சுய ஊரடங்கு விதைக்கப்பட்ட
பிறகு நமது எல்லா செயல்களும் முடக்க பட்டுவிட்டன ஆனாலும் சில தவிர்க்க முடியாத
விஷயங்களுக்கு விதி விளக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் நிச்சயிக்க பட்ட திருமணங்கள்.
முன்னர் பெரிய பெரிய மண்டபங்களில் நடத்த குறிக்கபட்ட மணவிழாக்கள் எல்லாம்
நெருங்கிய உறவினர்கள் இருபது அல்லது முப்பது பேர் முன்னிலயில் நடந்தது. இந்த ஒற்றை
வரி செய்தியில் மூலம் நாம் தெரிந்து கொள்ள
வேண்டியது வீண் ஆடம்பரம் தவிர்கபட்டது. திருமணங்களில் வீண் ஜம்பத்திக்கு தேவைக்கு
அதிகமாக உணவுகள் பரிமாறப்பட்டு அவை சாப்பிடாமல் வீணாக்கப்படும் தவிர்க்க பட்டது. ஒரு புள்ளி
விவரம் சொல்கிறது இந்தியாவில் ஒரு நாளைக்கு
ரூ .244 கோடி மதிப்புள்ள சமைத்த உணவு
குப்பையில் கொட்டபடுகிறது அல்லது வீணாக்குகிறது: அதேசமயம் கிட்டத்தட்ட 194 மில்லியன்
இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் பசியுடன் உறங்குகிறார்கள், பண்டிகை மற்றும் திருமண
விழாக்களில் இந்த அளவு கூடும். மின்சார
செலவு, முகூர்த்த நாட்களில் போக்குவரத்து
நெரிசல் அதற்கான எரிபொருள் மிச்சம். நமது வாழ் நாள் சேமிப்பில் பெரும்பகுதி நம் பிள்ளை அல்லது
பெண்ணின் திருமண விழாவுக்கே செலவழிக்க படுகிறது. குறைந்த பட்சம் ஐந்து லட்சத்தில்
இருந்து கோடிகளில் திருமணத்திற்கு
செலவாகிறது. அந்த கால திருமணங்கள்
பெரும்பாலும் அவரவர் வழக்கப்படி அறுவடை காலங்களில் மணமகன் அல்லது மணமகள் இல்லத்திலேயே நெருங்கிய உறவினர்கள்
முன்னிலையில் எளிமையாக நடத்தப்பட்டது. மிகுந்த வசதி படைத்தவர்கள் தவிர பெரும்பாலும்
பணிஒய்வில் கிடக்கும் பணத்திலோ அல்லது கடன் பட்டோ திருமணம் செய்து விட்டு வாயது
முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில்
இருகிறார்கள். இது கொரான நமக்கு சொல்லி தந்த பாடம்
இனி ஒரு விதி செய்வோம் சொந்த வீடு இருப்பவர்கள்
அவரவர் வழக்கப்படி மணமகன் அல்லது
மணமகள் இல்லத்திலேயே நெருங்கிய உறவினர்கள்
முன்னிலையில் எளிமையாக நடத்தி விட்டு (இப்போது எல்லா திருமணங்களும் பதிவு செய்ய
வேண்டியது அவசியம்) அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்து
கொள்ளலாம் சொந்த வீடு இல்லாதவர்கள் சார் பதிவாளர் அலுவலத்தில் திருமணம்
மற்றும் பதிவு செய்து கொண்டு ஹோட்டலில்
விருந்து வைத்து கொள்ளலாம்.
குறிப்பு – அடுத்து –ஆன்மிகம் –பொருளாதாரம்- வணிகம் பற்றியும் எழுதுவேன்